கவிமணி நேரிசை வெண்பா செந்தமிழ்க்கு வாழ்வளித்தோன் சேர்ந்தோர்க்கு நண்பளித்தோன் சிந்தையினைச் செம்மைக்கே தந்துவந்தோன் - உந்திஎழும் செய்யுளுக்கு வாயளித்தோன் தேசிகவி நாயகனை உய்யவரு வள்ளலென ஓது. ஒன்றிரண்டு கற்றவுடன் ஒப்புண்டோ இங்கெமக் கென்றலைவோர் மிக்குவரும் இந்நாளில் - துன்பறியநல் நூலுணர்வும் நுண்மாண் நுழைபுலமும் வாய்த்தும் எப் பாலும் பணிவதவர் பண்பு. ஆத்தங் குடியூரில் அண்ணா மலையரசர் போர்த்திப் புகழ்செய்தார் பொன்னாடை ஏத்தெல்லாம் எற்கன்று தாய்த்தமிழுக் கென்ற கவிமணியார் நிற்கின்றார் என்னுள் நிறைந்து. 3 (செட்டிநாட்டரசர், கவிமணி அவர்களுக்குப் பொன்னாடை அணி வித்துப் போற்றிச் சிறப்பித்த காட்சியைக் கண்டு களித்துப் பாடிய பாடல்.) |