நேரிசை வெண்பா ஆண்டறுப தானாலும் அன்றேபோல் இன்றளவும் காண்டகுநல் தோற்றத்தன் காசினியில் - மீண்டும்பல் ஆண்டாண்டு வாழ்ந்திடுக அன்பன் முருகப்பன் ஈண்டும் புகழோ டிருந்து. கம்பன் புகன்றதெனக் கட்டுரைத்த பாக்கடலுள் நம்பிக் குளித்து நலங்கண்டான் - அம்புவிக்கு முத்தெடுத்துக் கோத்து முழுநூலில் தந்திட்டான் நத்துதமிழ்ப் பாவை நயந்து. முத்தெடுக்க மூழ்கி முருகப்பா பட்டதுயர் தித்திக்கும் செந்தமிழே நேர்ந்துணரும் - வைத்திருந்த தஞ்சைமன்னன் ஏடுரைக்கும் தக்கபுல வோர்குழுவின் நெஞ்சுரைக்கும் இவ்வுலகில் நின்று. 6 (அமராவதி புதூர் மகளிர் இல்லங்கண்ட திரு. சொ. முருகப்பனார் மணி விழாவுக்காகப் பாடப்பெற்ற பாடல்.) |