154 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
7. பல்வகை உலகம் துயில் எண்சீர் விருத்தம் தொழிலாளி : காலையிலே துயிலெழுந்து நீரைப் பாய்ச்சிக் களையெடுத்துக் கதிர்காத்துப் புவியைக் காத்தோம், ஆலையிலே நூல்நூற்றோம், அவற்றால் நல்ல ஆடைகளை ஆக்கிஉயர் மானங் காத்தோம், மாலைவரை வீடுகட்டி மரமும் ஏறி மடவாரை நகர்க்கனுப்பி உடல்அ லுக்க வேலைசெய்தோம், உணவில்லை, உறங்கச் சென்றோம்! வேதனையை மறந்திருக்கத் துயிலே! வாவா! முதலாளி : பெட்டகத்துப் பணம்நிறைத்துப் பூட்டி வைத்த பெருஞ்சாவிக் கொத்தின்மேல் திண்டு வைத்துக் கட்டில்மேல் விரித்திருக்கும் மெத்தை மீது கண்ணயரச் சென்றேன்நான்; கடைக்க ணக்கும், வட்டிவயல் வரவிருப்பும், செல்வம் இன்னும் வரும்வழியும், எண்ணுவதால் உறக்கம் இல்லை; கட்டிவைத்த பொருள்கொண்டு வாங்கு தற்குக் கடைச்சரக்கா அவ்வுறக்கம்? என்ன செய்வேன்! |