158 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
மாதவி நிலைமண்டில ஆசிரியப்பா ஆரிய மாக்கள் அவர்நிலம் விட்டுச் சீரிய உயர்தனிச் செம்மொழி வழங்கும் தமிழகம் புகுந்து தறுகண் அருள்நிறை தமிழர்க் கெல்லாம் தகுநிறை கற்பினைச் சொற்றனர் எனச்சில கற்றோர் செப்பினர்; நற்றகு மரபினர் கற்பறி யாரோ? நன்றோ இதுவென நானயர்ந் திருந்தேன்; துன்றிய அரசினைத் துறந்திடு தூயோன் இளங்கோ என்முன் தோன்றி “மனத்தைத் துளங்க விட்டாய் துயருனக் கேனோ?” என்றனர்; என்துயர் இதுவெனச் சொன்னேன்; “மதியிலி கேட்பாய்! மாதவி வாழ்வு புதுவ தன்றே புகல்வதை யறியாய்! ஆட்டம் பயின்றாள், அரசனும் விரும்பும் கோட்டமில் குணத்தாள், கோவலன் றன்மேல் நாட்டங் கொண்டாள், நல்லற மென்னும் இல்லறம் பூண்டாள்; எழில்மணி மேகலைப் பேறும் பெற்றாள்இப் பெரிய வாழ்வு மாறுமோர் நாளென மனத்திலும் நினையாள் ஆயினும் அந்தோ அரசன் பிழையால் ஆயினன் பிணமென அறைந்தனர் அறிந்தோர்; தீதிலாக் கோவலன் தீர்ந்தனன் என்ற தீமொழிக் கேட்டுத் திகைத்தனள், பதைத்தனள்; |