162 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
வளரக் கெடும்! நிலைமண்டில ஆசிரியப்பா குறுநடை நடந்து கூடி ஒன்றாய்க் கோழியின் குஞ்சுகள் குலவி யிருந்தன; எச்சில் இலைகள் இன்னும் பற்பல மிச்சில் எல்லாம் மிதந்து கிடக்கும் குப்பைக் கோட்டில் கூர்உகிர் விரலால் கிளறிக் கிளறிக் கிடைத்ததைக் கோழி குஞ்சிகட் களிக்கக் கொக்கரித் ததுவே; பறந்து வந்தன பச்சிளங் குஞ்சுகள், மொய்த்திடும் அவற்றுள் முந்தித் திறக்கும் மென்சிறு வாயுள் வன்பெரு மூக்கால் கொஞ்சிக் கொஞ்சிக் கொடுத்தது கண்டேன்; அடடா அடடா! அன்னையின் அன்புக் கேதடா உலகில் ஈடும் எடுப்பும்? அஃறிணைப் பிறப்பும் அன்னையின் அன்பால் பின்னிக் கிடக்கும் பெரு நிலை உணர்ந்தேன்; அவைகள் யாவும் அஞ்சிட ஓர்குரல் வானிற் கேட்டது; வட்ட மிட்ட பருந்து வந்து பாய்ந்தது; கோழி தன்முழு வலியால் தாக்கி விரட்டும் தகவு கண்டு தாய்மைப் பண்பை மேலும் வியந்தேன் சின்னாள் சென்றன குஞ்சுகள் பெரிய கோழிகள் ஆயின; குப்பையை அன்னைக் கோழி கிளற இரைபெறும் நோக்கால் இளைய கோழிகள் |