வேண்டுவன எண்சீர் விருத்தம் குணத்தாலும் உடலாலும் அழகு மிக்க குமரிஎனை மணந்தின்பம் கொடுக்க வேண்டும்; கணக்கோடு மகப்பேறு நிகழ வேண்டும்; கள்ளமிலா நண்பருடன் தொடர்பு வேண்டும்; மணத்தோடு தென்றல்வந் துலவு கின்ற மாடியுள்ள வீடொன்று வேண்டும்; வாழ்வு பணத்தாலே இடரின்றி நடத்தல் வேண்டும்; பகையில்லா அருளுள்ளம் இருத்தல் வேண்டும். 1 (பாடிய பாடல்கள் பல, ஆயினும் ஒன்றுதான் கிடைத்தது.) |