178 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
குடும்பம் ஒரு காவியம் எண்சீர் விருத்தம் அன்பினுக்கோர் எல்லைஎனும் அன்னை, தந்தை, அறவுரைகள் எடுத்துரைக்கும் ஏடாம்; இல்லாள், இன்பமெனும் சுவையுணர்த்தும் ஏடாம்; உள்ளம் ஈர்க்கின்ற மழலைமொழிப் பிள்ளை, நெஞ்சத் துன்பறுக்கும் இசைச்சுரங்கம்; உடன்பி றந்த துணைவர்களோ, தோள்வலிமை காட்டும் ஏடாம்; வன்புரைக்கும் நாத்தியவள், அவலம் என்னும் சுவையினையே வடிகட்டி உணர்த்தும் ஏடாம். ஆதலினால் குடும்பமது சுவையால் நெஞ்சை அள்ளுமொரு காவியமென் றறைதல் சாலும்; மோதலிலாக் குடும்பத்தில் பகைக்கு ணத்தை மூட்டிவிடும் ஊராரோ, காவி யத்தைத் தீதுறவே அரித்தொழிக்கும் அந்துப் பூச்சி செல்கறையான் இவைபோல்வர்; அவர்கள் பேச்சைக் காதுமடுத் திடவேண்டா ஒதுக்கி விட்டுக் காவியத்தைக் காத்திடுக வாழ்வீர் நன்றே 2 |