தண்முகிலே நீபொழிந்தாற் சோறே யில்லை தயைசெய்வாய் என்றுழைப்பால் உண்போன் சொல்வான்; கண்மறையப் போர்வைக்குள் சுகமே காண்போன் கனித்திருப்பான்; இரப்பாளன் வசவு சொல்வான்; விண்மழைக்கு வரவுரைத்து மயில்கள் ஆடும்; வேறொருபாற் குயில்வருந்தி வாய டங்கும்; பண்ணிசைக்கும் கவிஞனுடன் காள மேகம் பாரிலெவர் உரைகேட்டு நடத்தல் ஆகும்? 4 (பலரும் வந்து, `அதைப்பாடு, இதைப்பாடு’ என்று தொல்லை தந்த போது பாடிய பாடல்.) |