மறைந்தாரோ? எண்சீர் விருத்தம் ஐயையோ திரு.வி.க. மறைந்தார் கொல்லோ ஐம்புலனும் ஒடுங்கியதே! தமிழி னத்தார் செய்வதென்ன? தமிழ்பேசும் செவ்வாய் எங்கே? செம்மையுறு தொண்டெங்கே? சமயம் சார்ந்த பொய்மைஎலாம் அழித்தாரே! புதுமை வாழப் பொதுமைநெறி கண்டாரே! அவர்ந மக்குக் கைமாறு கருதாமல் உழைத்தா ரந்தோ! கதறுகிறேன் அவர்மறைவு கேட்ட தாலே தாழ்ந்தநிலைத் தமிழகமே! நின்வாழ் வுக்கே தந்நலத்தை மறுத்தெழுந்த தூயர் தம்மை ஆழ்ந்தநிலைக் காக்கிவிட்டாய்! ஈது மாறா அவமானம்! அவமானம்! வறுமைப் பாட்டில் வீழ்ந்திருந்தும் வாழ்வாங்கு வாழ்ந்து நின்றார்; வீரமுடன் இருந்தாரே அவரை இங்கு வாழ்ந்திருக்க விட்டாயா? நன்றி யீதோ! வீணருக்கு வாழ்வுதந்தாய் அந்தோ! அந்தோ! 2 |