204 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
பண்ணுயர் தமிழாற் பாடி எழுப்புவை துயிலை மறந்து தோகை நின்னுடன் மயலுறப் பேசி மகிழ்ந்தநல் லிரவுகள் நினைதொறும் நினைதொறும் இன்பம் நிகழ்த்தும்; அனைய இன்பம் அட, ஓ பெரிதே! ஆடல் பாடல் அரங்கிலும் என்னுடன் கூட வந்து குலவித் திகழ்ந்தனை; ஊடல் சிலகால் உற்றனை யாகிலும் தேடி வந்து பாடி மகிழ்ந்தனை; உயிரில் உணர்வில் பேச்சில் மூச்சில் அயரா தென்னுடன் ஆடிக் களித்தனை; பிரியா தென்னைப் பேணிய காதலி! உரியாய் நின்னை வேண்டுவல் ஒன்று; நரம்பிற் குருதி நடமிடும் வரையிலும் திறம்பா தென்னுடன் திகழுதி நீயே! |