7. எனது வாழ்க்கை எனது வாழ்க்கை எழில்மலர்ச் சோலை மனத்தில் இப்படி மற்றவர்க் கெண்ணம்; வண்ணமும் மணமும் வாரி இறைக்கும் எண்ணில் மலர்கள் நண்ணுபூங் காவென இலங்கிட வேண்டும் என்பதென் ஆவல்; கலங்கிய மனத்தின் கற்பனைக் கனவிது; நீரே யறியா நிலமென் வாழ்க்கை யாரே அறிவார்? ஆகினும் உண்மை! காய்ந்தஅந் நிலத்திற் கண்கவர் சிலசெடி வாய்ந்ததும் உண்டு; வண்ணமும் மணமும் தோய்ந்த மலர்கள் துளிர்த்ததும் உண்டு; நெருங்கிப் பழகியோர் நெஞ்சிற் பழுத்த பரிவும் அன்பும் உரிமையும் உடையோர் ஊற்றிய புனலால் தோற்றிய மலரவை; ஆற்றிய உதவியை ஆருயிர் உளவரை போற்றிப் போற்றிப் புகழ்தல் அன்றி ஏற்ற கைம்மாறு யானறி யேனே! 11.06.1980 |