208 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
8. எனது வாழ்வில் உற்றவள் ஒவ்வோர் நாளில் உலையிட அரிசி யில்லாச் *சொற்றனை என்பாற் சொல்லத் துவண்டுளஞ் சோர்ந்து செல்வேன்; பற்றுளங் கொண்ட நண்பர் பரிந்துகை கொடுப்பர்; ஆனால் உற்றெனை ஏழை யென்றால் உளத்தினுள் அதனை யேலேன்! (1) உடுத்திடும் உடைக்குக் கூட ஒரோவழித் தவித்த துண்டு துடித்திடும் அற்றை நாளில் துணிபல தந்து துன்பம் துடைத்துநல் லன்பு காட்டித் தோழர்கை கொடுத்து நிற்பர்; நடப்பிது வெனினும் ஏழை என்றெனை நவில மாட்டேன்! (2) பிணியெனைப் பற்ற நெஞ்சம் பேதலித் துழலுங் காலை தணியவே வந்து தாய்போல் தண்ணருள் சுரந்து காக்கும் *அண்ணலார் உதவ மெய்யில்! ஆருயிர் தங்கு மேனும் எண்ணவுஞ் செய்யா துள்ளம் ஏழையாம் இழிந்த சொல்லை (3)
*சொற்றனை - சொல்தனை **அண்ணலார் - புதுக்கோட்டை திருக்குறள் கழகத் தலைவர் பு.அ.சுப்பிரமணியனார் |