மக்களின் கல்விக் காக மனம்மிக மாழ்கும் போது தக்கவர் அன்போ டந்த மயக்கினைத் தவிர்ப்ப துண்டு; சிக்கனம் அறியா என்றன் சிந்தனை கலங்கு மேனும் பொக்கையாய் ஏழை யென்று புகலுதல் அறவே செய்யேன்! (4) வாழ்வினில் துயர வெள்ளம் அலைத்திட வந்து பன்னாள் சூழ்வதும் உண்டு; பண்பர் தூயநற் றொண்டர் அன்பர் தாழ்விலா அளியர் என்னைத் தாங்கிடத் தாமே வந்து சூழ்பவர் உண்டென் றாலும் சொல்லிடேன் ஏழைச் சொல்லை! (5) பணவரு வாயிற் பற்றாக் குறையெனைப் பற்றும் போது துணையென நட்டார் வற்றா அருளுடன் தோள்கொ டுப்பர்; தணலென *நிரப்பு வந்து தனியெனைத் தகைத்துத் தாக்க அணுகினும் ஏழை யென்றால் அரசன்யான் ஏற்ப தில்லை! (6) 22-03-1984
*நிரப்பு - வறுமை |