பக்கம் எண் :

210கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

9. சின்னந் தவிர்ந்தேன்

நீறினை அணிந்து பார்த்தேன்;
    நெற்றியில் திருமண் ணிட்டோர்
வேறெனப் பகைத்து நின்றேன்;
    விடுத்தபின் திருமண் வைத்தேன்.
நீறணிந் தோரை யெல்லாம்
    நெடும்பகை யாகக் கொண்டேன்;
*மாறிடும் இவற்றை இந்து
    மதமென ஏற்றுக் கொண்டேன்.

சிலுவையைத் தோளில் இட்டோர்
    சீறிடும் பகைவ ரானார்;
குலவிய குல்லா வைத்தோர்
    கொடும்பகை யாகப் போனார்;
நிலவிய நீறும் மண்ணும்
    நெற்றியில் அணிதல் விட்டேன்
உலகினில் நல்ல சின்னம்
    ஒன்றைநான் தேடி நின்றேன்.

சிலுவையைச் சுமந்து பார்த்தேன்;
    சின்னம்வே றணிந்தோ ரெல்லாம்
உலகில்அஞ் ஞானி என்றே
    உளத்தினிற் கருதிக் கொண்டேன்!
தலைதனிற் குல்லா வைத்தேன்
    மற்றது தரியா ரெல்லாம்
நிலவிய சைத்தான் என்றே
    நெஞ்சினிற் பகைத்து நின்றேன்.


*மாறிடும் - மாறுபாடுடைய