218 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
அன்றுநான் தெம்பும் ஆற்றலும் உடைமையால் ஒன்றிய அன்புடன் ஒட்டி நின்றனை; இன்றுநான் தளர்ந்தேன் இயல்புநீ மாறினை! வாழ்விலும் தாழ்விலும் மாறாக் குணத்தொடு சூழ்வதே நட்பெனச் சொற்றனர் முன்னோர்; வறுமையில் என்னுடன் வளர்ந்தனை இன்றோ பழமை மறந்தாய் பண்பினைத் துறந்தாய் என்முன் நில்லேல் இகழ்ந்துனை வெறுத்தேன்; மண்ணில் முடிநீ மாய்ந்து மடிநீ கண்முன் காணா தொழிகநீ கடிதே! (தலையின் இழிந்த முடி பற்றிப் பாடியது) 23.09.75 |