பக்கம் எண் :

220கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

15. புகழ்ச்சியின் பயன்

ஆர்வத் துடிப்பால் ஆசைப் பெருக்கால்
பேர்பெற் றொளிரப் பெருகிய நினைப்பால்
ஏதோ எழுதினன் என்பாற் கொணர்ந்தனன்;
தீதோ நன்றோ திறந்துநான் படித்தேன்;
செறிந்த கற்பனை சிற்சில அதனுட்
சிறந்திடல் கண்டேன் சிந்தை மகிழ்ந்தேன்
மகிழ்ந்துளம் நெகிழ்ந்திட வாழ்த்திப் புகழ்ந்தேன்.
புகழ்ந்துரை புகல்வது புரையன் றென்பதால்;
பாவலன் நான்சொலும் பாராட் டுரையை
ஆவலிற் பருகினன் அவனிரு செவியால்;
நாவின் மழையில் நனைந்தனன் குளிர்ந்தனன்
பாவின் திறமெலாம் பயின்றிடப் பலப்பல
காவியம் படைத்தனன் கண்டுநான் வியந்தேன்;
என்மொழி அவற்கோர் ஏணியாயது;
நன்மொழி நலந்தரும் எனநான் உணர்ந்தேன்;
மற்றொரு கவிஞன் வந்தனன் என்பால்
பற்றுடன் அவன்தன் படைப்பினைத் தந்தனன்;
புகழ்மொழி பொழிந்தேன் புதுப்புது நூல்பல
புகலுவன் என்மனம் பூத்ததோர் நினைவால்;
உருக்கிடும் புகழ்ச்சியை உளத்திடை நிறைத்தனன்;
செருக்கினன்; மீசை முறுக்கினன், விரைத்தனன்;
நிமிர்த்தினன் தலையை; நெருக்கினன் விழியை;
உருத்து நோக்கினன் ஒப்பென என்முன்
நிறுத்திட எவரே நிலத்தினில் உள்ளார்?
யானே பெருங்கவி என்றவன் மனத்துள்