தானே சொலில்சொலித் தருக்கித் திரிந்தனன்; புதுவன படைக்கும் நினைவதை யிழந்தனன்; மதுமயக் குற்றென மதிமயக் குற்றனன்; ‘இளங்கோ வள்ளுவர் எத்தனை யியற்றினர்? உளங்கொளும் ஒவ்வொரு நூலால் உயர்ந்தனர்’ என்றவன் நினைந்தே இழிந்தனன் இழிந்தனன்; நன்றுரை புகன்றேன் நாவாற் புகழ்ந்தேன். என்மொழி அவற்கோர் இடுதடை யாயது; தவறுகள் உண்டாம் தகுவன ஆற்றினும் அவரவர் பண்பறிந் தாற்றா விடத்தென ஓதிய மொழிப்பொருள் உணர்ந்தேன் யானே. 23-12-1975 |