பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை223

அவற்றை யெல்லாம் அவலம் என்மேல்
திருப்பி விடுக்கும்! துரத்தி யடிக்கும்!
அன்றுயர் வானில் அமைதியும் நீலமும்
நின்றிடல் கண்டேன்; இன்றவை உளவோ?
மண்ணில் வளர்ந்த மரங்களும் அவற்றில்
வண்ணங் காட்டும் வளரிளந் தளிரும்
கண்ணின் விருந்தாய்க் களிப்பினை நல்கும்;
நினைப்பின் அவையெலாம் நிலைத்தவோ இன்று?
மனத்தால் விழைந்தவை அனைத்தும் மாறின!
அவையோ மாறின? அல்ல அல்ல;
தவிரா மாறுதல் சார்ந்ததென் பாலே!
இனியநல் லமைதி எய்துமோ இனிமேல்
தனியல் லின்பந் தளிர்க்குமோ மனத்தே?

(ஊட் (HOOT) என்பவர் இயற்றிய பாடலின் தழுவல்)