பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை225

அன்பின் வலிமைதனை அன்பு தருந்தொடர்பை
நன்கு தெளிந்தான் நாள்கள் வளர்ந்துவரக்
காதலெனும் பாலுணர்வைக் கண்டு மிகமகிழ்ந்தான்
ஆதி மனிதனவன் அன்பின் பயன்கண்டான்;
பேசும் மொழியறிவைப் பெற்று வளர்ந்ததற்பின்
மாசிலா நூல்கள் வகுக்கும் வகையறிந்தான்;
சாதல்தரும் வீரத்தை ஆதல்தரும் காதலினை
ஓதும் புறமென்றும் உள்ளும் அகமென்றும்
கண்டான் கனிதமிழில் விண்டான் உலகதனிற்
கொண்டான் பிறரறிந்து கொள்ளாப் பெருமைஎலாம்;
அவ்விரண்டு பண்பிற்கும ஆன இலக்கணமும்
செவ்விதிற் செப்பினான் சேர்த்து.

5.12.1965