228 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
நெஞ்சினில் தமிழை வைத்தார் நெடுந்தொலை நாடு சென்று விஞ்சையின் மேன்மை கண்டு விளக்கிடும் பயண நூலாம்; எஞ்சலில் திறமை கொண்டார் எழுதிடுங் கதையின் பேழை; செஞ்சொலைச் சிதைக்கா வண்ணம் செந்தமிழ் எழுதும் ஏடு! கலைகளில் தோய்ந்த உள்ளம் காத்தலால் இந்த ஏடு பலவகைச் சிறப்பும் மேவிப் பயன்தரக் காணு கின்றோம்; உலகினில் அரசின் சார்பில் உலவிடும் இதழ்கட் கெல்லாம் தலையென உலகம் போற்றத் தமிழர சென்றும் வாழ்க! (‘தமிழரசு’ ஐந்தாம் ஆண்டு மலருக்கு) 03.06.1974 |