எது சிலை எது நீ எனக்காண் பரிது! புருவச் சிலையில் பூத்துள வியர்வால் உருவச் சிலை எது உன்னுடல் எதுவென உணர வல்லேன்; ஒப்பிலை இவற்கே! இணர்மலர்க் கோதையின் இதழின் சிரிப்பும் இன்னருள் விழியும் எப்படிப் படைத்தனை? கற்பனை மிகுத்திடும் சிற்பக் கலைஞ! நிற்புகழ்ந் தேத்த முற்படும் எனக்கு நாவும் ஒன்றே நானென் செய்கேன்?’ சிலையில் ஒருகுறை `பலபடப் புகழும் பாவாய்! என்றன் கலைமுறைத் திறனைக் காட்டிலேன்; நெஞ்சில் வாழும் வடிவின் வார்ப்படம் இவ்வுரு ஊழால் அமைத்திடும் உருவினில் ஒருகுறை உளதிவள் நெஞ்சை உளியாற் படைத்த சிலையிற் பொருந்தச் செய்திலேன்’ என்றனன்; நெஞ்சம் கலந்தன `நெஞ்சை நும்பால் நிறுத்திச் சென்றேன் வஞ்சம் செய்தீர்’ என்றனள் வஞ்சி; தொலைவில் இருக்கும் சிலையைக் காணத் தோழி அகன்றனள், தூயநற் கலைஞன் `வாழி நெஞ்சே வாழிய மயிலி என்றன் நெஞ்சும் உன்றன் நெஞ்சும் ஒன்றிய படியால் எடுத்ததைச் சிலையில் வைத்திட மறந்தேன் மைத்தடங் கண்ணி! தைத்திரு நாளில் தாம்கலந் தனவே; மன்னன் மகள் நீ மயலுறும் என்பால் அன்புடன் கடைக்கண் அருளுதி யோ?’ என, |