பக்கம் எண் :

230கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

வாழ்விலும் அலைகள் உண்டு;
    வருமிடர் பலவும் உண்டு;
வீழ்வுறும் சரிவும் உண்டு;
    விழுங்கிடும் சுறவும் உண்டு;
பாழ்படும் இவற்றைக் கண்டு
    பதறிடா தெதிர்த்து நின்று
தாழ்வுறாத் துணிவை நம்பித்
    தலைப்படின் இன்பங் காண்பாய்.

தனதுளத் துணிவை நம்பித்
    தாழ்விலா முயற்சி கொண்டான்
வினையிடை ஊழைக் கூட
    வென்றிட வல்லான் என்று
மனவளப் புலவன் சொன்னான்;
    மற்றிதை மறுப்பா ரில்லை;
உனையினி நம்பு; வாழ்வில்
    உயர்வது திண்ண மிங்கே!

30.01.1980