234 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
வெளிவரு வேன்எனை விஞ்சியோர் எவருளர்? என்றும் சான்றோர் எண்ணம் போல நின்றுமேல் நோக்கி நிமிர்ந்தெழும் இயல்பினேன்; தடுத்துப் பிடித்துத் தடைசெயச் சிறைசெய எடுத்திடும் முயற்சிகள் என்னிடம் தோற்கும்; புகுதற் கியலாப் புல்லிய இடத்தும் புகலால் என்பெயர் புகைஎனப் புகல்வர்! நல்லியல் மாதர் *நடுவினை நிகர்த்திடும் மெல்லிய உருவில் மேவுவேன் எனினும் பல்வகை ஆலையில் பருத்துள குழாயில் விக்கிர மாதித்தன் வேதா ளம்போல் உக்கிர மான உருவொடு வருவேன்; மணம்படு பொருளிலும் மயங்கிநான் எழுவேன்; பிணம்சுடு காட்டிலும் பேருலா வருவேன்; ஆண்டியின் கையிலும் அடங்கி யிருப்பேன்; ஆண்டவன் முன்னரும் அடைக்கலம் புகுவேன்; சிறுகுடில் ஆகினும் வளமனை யாகினும் சிறியவன் எனக்குச் சிறப்பிடம் உண்டு; நெருப்பின்றிப் புகையா நிலையினை உணர்வீர் சிறப்புறும் என்புகழ் செப்பினேன் உமக்கே!
*நடு - இடை |