பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை243

ஏருழவன் பாட்டுக்குப் பொழிப்பு மோனை
    இணைமோனை யாகிஅணி கூட்டி நிற்பாய்!
மாரியென நின்பெயரைச் சொல்ல லன்றி
    மாறியென ஒருநாளும் உரைத்த தில்லை;
பாருழல முரண்டொடையாய் மாறி நின்றாய்!
    பயன்முழுதும் செந்தொடையாய் மாறிற் றம்மா!
காருனது மனத்தியைபுத் தொடைபொ ருந்தக்
    கருணைமழை பொழிந்தருள்வாய் உலகம் உய்ய!

மயங்கிசையும் தாழிசையும் கேளா வண்ணம்
    மழையோசை கேட்கட்டும்; செய்யுள் எல்லாம்
பயன்கெழுமி வளங்கொழிக்கத் துள்ளல் ஓசை
    பரவட்டும் வனப்புமிகும் இல்ல மெல்லாம்
வயங்கிழையார் வளையோசை பொங்கப் பொங்கல்
    வழங்கட்டும்; புறநடையில் மாந்தர் செல்லா
தியங்கட்டும்; ஒழுகிசைவான் வழங்க எங்கும்
    இன்பமெலாம் பொங்கட்டும், மழையே வாவா.

(வான்பொய்த்த போது வருந்திப் பாடிய பாடல்.)

(பாடலில் யாப்பிலக்கணச் சொற்கள் பயின்று வந்துள்ளன. அவற்றின் பொருள் நயங்கண்டு மகிழ்க,)

-9-12-1974