பக்கம் எண் :

250கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

தேய்தலும் பின்வளர்ந்து தேறுதலும் விண்மதிக்
கோய்தலிலாப் பண்பாகும்; வாழ்விலுமுண் டாதலினால்
வாழ்வை வெறுக்காதீர் வாழும் வகைதெரிந்து
தாழ்வைப் புறங்கண்டு தன்முயற்சி மேலோங்கிப்
போராடி வெற்றிப் புகழ்மாலை கொண்டிடுவீர்
நேரான வாழ்வில் நிலைத்து.

(வம்புத்தேன் - புதியதேன்)

(மாநிலத் தமிழாசிரியர் மாநாடு, சென்னை)

27.12.1968