254 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
35. அவள்தான் பாடவைத்தாள்! அவள்தான் என்னைப் பாட வைத்தாள் அவனியிற் பெரும்புகழ் சூடவைத்தாள் - அவள்தான் பாலா கினும்சுவைத் தேனாகினும் பாகா கினும்தரும் கேளாமலே நாலா யிரங்கவி நூலாகவே நான்பாடு வேன்அவை பாராமலே - அவள்தான் கொஞ்சம் வருவாய் எனநான் அழைப்பேன் கொஞ்ச வருவாள் என்னுளம் அணைப்பாள் வஞ்சி எனநான் வாய்விட் டழைத்தால் வஞ்சியேன் வஞ்சியேன் என்றுளந் துடிப்பாள் -அவள்தான் கண்ணசை வாலொரு காப்பியம் படிப்பாள் கையசை வாலெழில் ஓவியம் படைப்பாள் பெண்ணியல் யாவையும் என்னிடங் கொடுப்பாள் பெரும்பெருங் காப்பியம் தரும்படி உரைப்பாள் - அவள்தான் |