26 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
என்மொழி கேட்க இசைகுவை யாயின் மன்மகள் நினக்கு மனைமகள் ஆவள் உன்கலைத் திறனை உலகமும் ஏத்தும்’ என்றனன் வேந்தன்; இசைந்தனன் சிற்பி; ‘குன்றடர் மலையைக் குடைந்தொரு கால்வாய் சென்றிடப் படைத்துச் சிற்பத் திறமெலாம் காட்டி அதனிரு கரையிலும் அமைத்திடல் வேட்டனன் யானே விரைவினில் முடிப்பின் வேட்டவள் தன்னை வியன்மணம் கொள்வாய்; காட்டுக நின்திறம் கலைஞ! என் ஆணை வினைகள் முடியுமுன் விழைவோட் காண முனைவதும் குற்றம்இம் மொழியுமென் ஆணை, எனமொழிந் திருந்தனன் இறையவன் அரியணை; சுழல்மனம் துணிந்தது மனம்நிறை துயரினன் மயங்கினன் செய்வகை யாதென அறிகிலன்; `யானென் செய்குவென் தீதுறு மோ?’எனச் சிந்தனை செய்தனன்; மயிலியின் திருவுரு மனக்கண் தோன்றலும் வெயிலவன் போல வெண்முகம் சிவந்தது; `குறிஞ்சி நாட; நீ கொடுத்தஇவ் வாணையை விரைந்து முடித்துநான் வெற்றியுங் கொள்வேன்’ எனுமொழி கூறி ஏகினன் சிற்பி; வினைத் திறன் வெற்றி காதல் உணர்வு கருத்தினில் உந்தி மோதி எழுதர முனைந்தனன்; உழைப்பால் மலையைக் குடைந்தனன் மாபெருங் கால்வாய் அலையொடு பாய்ந்த(து) அதனிரு கரையில் உலகம் உவப்ப உயர்பெருஞ் சிலையெலாம் படைத்தனன்; ஆண்டுகள் பலப்பல கடந்தன உடலந் தளர்ந்தனன் உள்ளந் தளர்ந்திலன் |