260 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
39. இசை மாறிய வீணை! காதலெனும் வீணைதனைக் கையிலெடுத்தேன் கல்யாணி கேட்குமென மீட்டிமுடித்தேன் மோதியது மற்றஇசை காது கொடுத்தேன் முன்னையிசை மாறிடவோ ஆசைபடைத்தேன்! ஓர்நரம்பில் கையமைத்து யாழைஇசைத்தேன் வேறிடத்தில் மாறிடயார் கையைஅமைத்தார்? சீர்விளங்கும் பாடலொன்று பாடநினைத்தேன் - இசை சேரவில்லை ஆதலினால் நாடிதுடித்தேன்! மீறிவரும் ஆசையினால் பாடல்படித்தேன் மாறிவருந் தாளத்தினால் வாடிமுடித்தேன் யாரிதற்குக் காரணமென் றாவிதுடித்தேன் ஆறுதலைக் காணவில்லை கண்ணீர்வடித்தேன்! வேதனையில் வீழ்வதற்கோ வீணையெடுத்தேன் வீணாகிப் போவதற்கோ மாலைதொடுத்தேன் சோதனையில் மாள்வதற்கோ ஆசைபடைத்தேன் சேரகஇசை பாடுதற்கோ பாடலமைத்தேன்? |