பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை261

40. காதலர் சொல்லாடல்

தலைவன்:         பஞ்சணையில் மலர்க்கணைகள்
பார்வையிலே விழிக்கணைகள்
மஞ்சமெனும் போர்க்களத்தில்
மாதரசி வீழ்த்திவிட்டாய்!

தலைவி:         பாய்ந்தாலும் விழிக்கணைகள்
பதியவில்லை நின்னுடலில்
காய்ந்தாலும் மாறவில்லை
காயங்கள் என்னுடலில்!

தலைவன்:         உள்ளமதிற் காயங்கள்
உண்டாக்கி விட்டதம்மா
கள்ளவிழிப் பார்வையினால்
கலங்கிநிலை கெட்டதம்மா!

தலைவி:         தஞ்சமென எனையடைந்தாய்
                        ததலைவாஎன் மனமகிழ்ந்தேன்
                        தநெஞ்சமெனுஞ் சிறையிலிட்டு
                        தநேயத்தாற் கட்டிவிட்டேன்

தலைவன்:         சிறைவைத்த பிறகெனக்குத்
திரையென்னும் மறைவெதற்கு?

தலைவி:         குறைபட்டுப் போகாத
தகூச்சமெனுஞ் குணமெனக்கு!

தலைவன்:         விண்ணுலகக் கனவிருக்க
தமண்ணுலக நினைவெதற்கு?

தலைவி:         கண்ணெனவே தமிழ்மரபு
தகாப்பதுதான் பெண்மரபு!