42. காவிய மேடையில் தலைவன்: காவிய மேடையில் பாவலன் பாடிய காரிகை இவள்தானோ? ஓவியம் வல்லவன் தூரிகை தீட்டிய ஓருயிர்க் கலைதானோ? கற்பனை மன்னவன் முத்திரைப் புனைகதை கண்டிடும் மகள்தானோ? சிற்பியில் தேர்ந்தவன் சிற்றுளி யாக்கிய மாதவிச் சிலைதானோ? தலைவி: பாரினை யாண்டவர் பாண்டிய மன்னரின் பரம்பரை இவர்தானோ? தேரினை ஓர்கொடிக் கீந்திடும் பாரியைச் சேர்ந்தவர் இவர்தானோ? கொடியெனப் பூங்கொடி கோட்டையில் கட்டிய கொற்றவன் இவர்தானோ? கடலென வீரரின் காவியம் படைத்திடக் கற்றவர் இவர்தானோ? 15.3.1982 |