266 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
44. அதுவா இதுவா? தலைவி: உறவா பகையா கேட்டு வருவாய் - வரும் உளமா இலையா பார்த்து வருவாய் இரவா பகலா இந்தப் பொழுதே இடரே மிகலால் கண்கள் அழுமே! தலைவன்: ஒளியா இருளா இந்த மனையில் உருவா நிழலா என்றன் விழியில் விழியா கணையா அந்த விழிகள் வெயிலா நிழலா சொன்ன மொழிகள்! தலைவி: கனவோ நனவோ வந்து மறையும் கணையோ மலரோ கட்டில் மருவும் கனலோ புனலோ கண்ணில் வழியும் கதிரோ மதியோ விண்ணில் தவழும்! தலைவன்: விருந்தா மருந்தா உண்ட உணவு அரும்பா மலரா கொண்ட உறவு இருந்தால் எழுந்தால் மங்கை நினைவு இதுதான் அவளால் வந்த விளைவு! |