பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை267

தலைவி:

குழலோ முகிலோ என்று புனைந்தார்
குயிலோ குரலோ என்று மொழிந்தார்
அழகோ கலையோ என்ன நயந்தார்
அறமோ முறையோ இன்று பிரிந்தார்!

தலைவன்:

உயிராய் உடலாய் ஒன்றி யிருந்தோம்
உலகே அதுதான் என்று மகிழ்ந்தோம்
மயிலோ அனமோ என்னும் நடையாள்
மயலே துயரே தந்து நடந்தாள்!