46. பள்ளிக்கு அழைத்தவள் எடுப்பு பள்ளிக்கு வாவென் றழைத்தவளே - முப் பாலமு துண்ணென அளித்தவளே - பள்ளிக்கு தொடுப்பு கள்ளைத்தான் பாலெனச் சாற்றினையோ? நின் காதலிற் கள்வெறி ஏற்றினையோ? -பள்ளிக்கு முடிப்பு காலடிப் பேரெழில் கண்டுமயங்கி - எழு காலடிப் பாவையே உன்னைநெருங்க நாலடிப் பாதையில் நீநடந்தாய் - உனை நாடியே வாதையில் நான்கிடந்தேன்! -பள்ளிக்கு ஊட்டுவை காமமே என்றுநினைந்தேன் - நீ ‘ஓம்புக’ மெய்ப்பொருள்’ என்று நடந்தாய் மீட்டுமுன் அன்பினை நாடி வளைந்தேன் மேவிய நல்லறம் பாடியணைந்தாய்! -பள்ளிக்கு |