270 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
கூடலில் மூப்பினைப் போக்கிவிட்டாய் - இளங் குமரனென் றென்னையே ஆக்கிவிட்டாய் ஊடலும் ஏனினி தேன்மொழியே - சொலும் உன்மொழி யாவையும் தீஞ்சுளையே! -பள்ளிக்கு 24.02.1987 இருபொருள் அமைந்த பாடலிது 1. தமிழ்: - பள்ளிக்கு - பள்ளிக்கூடத்திற்கு; முப்பால் அமுது - திருக்குறள்; கள்ளைத்தான் - கள்போல் இன்ப வெறியூட்டும் குறளைத்தான்; காதலில் - மொழிப்பற்றில்; காலடி - காற்பங்கான பாடல் வரி; எழுகாலடிப்பாவை - 7 x 1/4 ஒன்றே முக்கால் அடியுடைய குறட்பாவை; நாலடிப்பாதை - நாலடியாரில்; காமமே - காமச்சுவை மட்டுமே (காமத்துப்பால்) மெய்ப்பொருள் - செம்பொருள் (பொருட்பால்) நல்லறம் - நன்னெறி (அறத்துப்பால்) கூடலில் - நான்மாடக் கூடலில் 2. காதலி:- பள்ளிக்கு - பள்ளிகொள்வதற்கு; பாலமுது - பாலுணவு; காலடிப் பேரெழில் - காலழகு; எழுகாலடிப்பாவை - நடைபயில எழும் கால்களையுடைய பெண்; நாலடிப்பாதையில் - (ஊடலால்) நான்கு அடித்தொலைவில்; காமம் - இன்பம்; ஓம்புக மெய்ப்பொருள் - உடலோம்புக; நல்லறம் - நல்லறமாகிய இல்லறம்; கூடலில் - உன்னைக் கூடுகையால். |