பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை271

47. சிரித்த முகம்

சிரித்த முகம் வேணுமடி பெண்ணே - அதுதான்
சேவை செய்யும் பெண்களுக்கு
அழகு தரும் கண்ணே!

(சிரித்த)

வருத்தங்கள் வாழ்க்கையிலே வந்து வந்து போகும் - அது
வந்து புகும் வாழ்விலேதான்
இன்பம் வந்து சேரும்!

(சிரித்த)

கிள்ளக் கிள்ளத் தேயிலையும்
தழையுது பாரு - கடமை
செய்யச் செய்ய நன்மை வந்து
விளையுது பாரு...
மெள்ள மெள்ளத் துன்பம் வரும்
இயற்கையின் கூறு - அதைத்
தள்ளிவிட்டுக் கடமையிலே
இதயத்தைச் சேரு...

(சிரித்த)

மேடு பள்ளம் தாண்டுவதால்
சிதறிவிழும் அருவி - தரை
மேல்விழுந்து ஒன்றுகூடி அமைதியுடன் மருவி
நாடு நலம் செழிப்பதற்கு நாடி வருதல் போலே
நம்மிதயம் பதறிடாமல் பணிபுரிவோம் அதாலே...

(சிரித்த)

(‘கண்ணாடி மாளிகை’ திரைப்படப் பாடல் -1)