276 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
52. பேதமேது? ஆண்: நாணம் ஏனோ இந்த வேளையிலே - வண்டு நாடி ஓடும் மலர்ச் சோலையிலே நானும் நீயும் இந்த மாலையிலே நல்ல நாதம் ஆவோம் காதல்வீணையிலே! பெண்: காதல் வாழ்விலே கதிரென வந்தாய் காணாத இன்பம் கண்டிடச் செய்தாய்! ஆண்: கூடும் நமக்குள்ளே உருவம் வேறு - காதல் கொண்ட நெஞ்சில் பேதமேது? பெண்: பேதம் யாவுமே தீர்த்திட வந்தாய் - இந்தப் பேதை நெஞ்சம் மலர்ந்திடச் செய்தாய் ஆண்: நாணம் ஏனோ இந்த வேளையிலே - வண்டு நாடி ஓடும் மலர்ச்சோலையிலே நானும் நீயும் இந்த மாலையிலே இருவரும்: நானும் நீயும் இந்த மாலையிலே நல்ல நாதம் ஆவோம் காதல் வீணையிலே! (‘கண்ணாடி மாளிகை’ திரைப்படப் பாடல் - 6) |