நீர்கொண்ட மேகத்தைக் கடலினின்று நெடுந்தொலைவு உந்தி வந்து பேர்கொண்ட மலைப்பாங்கிற் சேர்ப்பதுவும் பின்னுமதைக் குளிரச் செய்து நீர்கொட்டச் செய்வதுவும் காற்றன்றோ? நீணிலத்துச் சான்றோர் என்ற பேர்பெற்றோர் அடுத்தடுத்து நன்மைகளே பேணிவந்து செய்தல் காட்டும்; வடக்கிருந்து வருவாடை வாட்டுவதும் தெற்கில்வரும் தென்றல் இன்பம் கொடுப்பதுவும் காட்டுமொரு பேருண்மை, கொடுமையிலாத் தமிழ் நாடும் வடக்கிருந்து வருபவையால் துயருழந்து வாடுவதும் தெற்கோ இன்பம் படைப்பதுவும் நாடறியும், உயர்வாம்இப் பண்புணர்த்தும் தென்றல் வாழ்க. 9 |