62 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
இயற்கையின் எழுச்சி நேரிசை ஆசிரியப்பா இயற்கை யரசி உலாவர எண்ணி எழுந்தனள் போலும் எனக்கரு தியதால் விளக்குக் கம்பம், வீதியில் நின்ற தந்திக் கம்பம் தலைவணங் கினவே; இவற்றின் கம்பியால் எடுத்தன தோரணம்; வீடுகள் தாமும் வீழ்ந்து வணங்கின; உயர்பெரு மரங்கள் உச்சியை மட்டும் அசைத்து நின்றன ஆர்ப்பொலி கேட்டு நின்ற நிலையில் நெடுக வீழ்ந்தன; புள்ளினம் தம்வாய் புதைத்து நின்றன; ஓடுகள் மலரென உதிர்ந்தன எங்கும்; குடிசைக ளிவற்றைக் கோமகள் காணல் வேண்டா என்று விரும்பிய வான்மரம் அடிவயிற் றகத்தில் அடக்கிக் கொண்டன; சிற்சில குடிசைகள் சிதறி வானில் வாண வேடிக்கை விளைத்தன; மக்கள் அங்கு மிங்கும் அலைந்து திரிந்தனர்; கதிரவன் மதியன் கரந்து நோக்கினர்; ஊரெலாம் பேரொலி ஓங்கி உயர்ந்தது; மூன்று நாள்கள் எங்கும் முழக்கம்; உலாமுடித் தேகினள் ஊரெலாம் ஓய்ந்தது; ஆயினும் வெவ்வே றார்ப்பொலி எழுந்தன; மண்ணிற் புதைந்த மகவைத் தோண்டிய |