64 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
படைத்தோன் வாழ்க! நிலைமண்டில ஆசியரிப்பா கற்பனை உலகம் பிருந்தா வனத்தின் பேரெழில் கண்டேன் பிறந்தார் உறுபயன் பெற்றேன் அன்றே; அப்பே ரெழில்நலம் அவனியில் காணத் தப்பியோர் விழிப்பயன் தப்பியோர் ஆவர்; எண்ண இயலா வண்ண மலர்கள் கண்கவர் வனப்பொடு கற்பனைப் பெருக்கும்; நிலமிசைப் படுபுல், நிமிர்தரு செடிகள்; வலைநிகர் கொடிகள் வகைவகை யாகக் கைபுனைந் தியற்றிய காட்சியே காட்சி! இருவிழி எதுவரை எட்டுமோ அதுவரை பரவிய எல்லை படைத்ததப் பூங்கா; பசுமையும் தண்மையும் பாங்குடன் குழைத்துப் பூசிய தென்னப் பொலிபூங் காமிசை வீசிய விழியோர் வியப்புற் றாங்கே இமையா நாட்டத் திமையோர் ஆவர்; விண்ணுல குண்டென விளம்புவர் கண்டிலேன் கண்ணெதிர் கண்டேன்அக் கற்பனை உலகை; நீரின் விதைகள் நீரால் விளைத்திடும் விந்தைகள் எத்தனை! நேரிற் காணின் அல்லது நிலைமையைப் பாரித் துரைக்கப் பற்றுமோ ஒருநா? ஆயினும் ஒரு சில அறைகுவன் கேண்மின்! |