முகிலிடை நிலா பாம்பொன்று நினைவிழுங்கும் என்று சில்லோர் பகர்ந்திடுவார் அதைநம்பார் அறிவில் நல்லோர்; வேம்பன்னார் எமைவீழ்த்த இனைய சூழ்ச்சி விளைத்தார்கள் தொலைத்தார்கள் தமிழர் ஆட்சி; கூம்புவதேன் தாமரைகள் உன்னைக் கண்டு? குடைந்துதேன் அருந்தமலர் சென்ற வண்டு தேம்புவதைக் காணோயோ சிறையிற் பட்டு? சென்றிடுவாய் வெளியில்விடச் சொல்லி விட்டு ஆரியத்தால் ஒளியிழந்த தமிழர் போலே அழகிழந்தாய் உனையடைந்த மேகத் தாலே; நாரியரின் முகங்கண்டு நாணி உள்ளே நண்ணினைநீ எனஎண்ணி நகைத்தாள் முல்லை; வேறினத்தார் நாடாள வீணன் அல்லேன் வேலெடுத்துப் போர்தொடுப்பேன் வெற்றிகொள்வேன் சீரழிப்பேன், எனக்கிளம்பும் வீரன்போலச் சிரித்தெழுந்தாய் மேகத்தைப் பிளந்து மேலே. 2 (பொன்னி இதழில் `பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பில் வெளிவந்த பாடல்கள். இரு பாடல்களே கிடைத்தன.) |