பக்கம் எண் :

68கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

3. காதல் உலகம்

காதல் நெஞ்சம்

நேரிசை வெண்பா

அவன் :-

கொல்லும் விழியுடையாய்!
                கொவ்வைக் கனியிதழாய்!
அல்லும் பகலுமுன்
                அன்புபெற - அல்லற்
படுமென்னை உள்ளத்தாற்
                பாராயோ? ஆவி
சுடுதுயரைத் தீராயோ?
                சொல்!

உள்ளப் பெருநிலத்தில்
                ஓங்கிப் படர்வகையில்
அள்ளித் தெளித்துவிட்டாய்
                அன்புவிதை - கிள்ளிப்
பறித்தெறியப் பாடுபட்டேன்
                பாழாயிற் றே!என்
குறிக்கோளாய் வாழ்வாயோ
                கூறு!

நண்பர் பலசொன்னார்;
                நான்மறக்க ஒல்லுவதோ?
கண்ணுள் மணியாய்க்
                கலந்துவிட்டாய்! - பண்ணும்
பனுவலுமென் றாகிவிட்டாய்!
                பாவிஎனைச் சேர
மனமிலையோ? சொல்லிடுவாய்
                மற்று.