புதருள் கனி உருத்தெழுந்த மார்பகத்தாள், வில்லொடித்த புருவத்தாள், உள்ளத்தே தைத்தோடிப் பாய்கின்ற வேல்விழியாள், கருத்தெழுந்த மேகத்தைப் புறங்கண்ட கரிகுழலாள், கன்னத்தில் அழகொளியாள், அன்னத்தின் எழில்நடையாள், சிரித்தெழுந்த செவ்விதழாள், இன்மொழியாள், அழகெல்லாம் சேர்த்தெழுந்த உடலுடையாள், அவளைக்கண் டென்மனத்தை மறுத்தெழுந்த ஆர்வத்தால் யாரென்றேன் விதவைஎன்றாள்; உன்மத்த நிலையடைந்தேன் அச்சச்சோ! அவள்நுகர முடியாத மலரானாள்! அகங்கவரும் எழில்கொண்ட சிலையானாள்! கோழைமன அச்சத்தார் முட்புதராம் அதனடுவே கனியானாள்! ஆவலெலாம் பாழன்றோ! இளம்பருவ எழில்நிறைந்த |