பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்83

தேன்சுளையே! அங்கெல்லாம் இனிமேற் செல்லேல்
    தேர்ந்தெடுத்துப் பணியாளொன் றமைப்பேன் என்றன்
மான்விழியே! அடுக்களையும் விடுத்து வந்து
    மகிழ்ந்திருப்போம் எனப்புகன்றேன்; ‘நானி ருக்க
ஏன்பணியாள்? நன்றத்தான் உங்கள் எண்ணம்!
    எழுந்தோடிக் காய்நறுக்கி உங்கட் கென்று
நான்சமைத்துப் பரிமாற, நீங்கள் உண்டு,
    நன்றுநன்று சமையலெனக் கூறும் போது

நான்காணும் இன்பத்துக் குவமை யுண்டோ?
    நம்மன்பிற் கிடையூறாம் பணியாள் வேண்டாம்;
ஊன்பெருத்தே உதியமரம் ஆக மாட்டேன்,
    உலைவாயை மூடவொரு மூடி யுண்டு
கூன்காணும் உள்ளத்தார் ஊரார் வாய்க்குக்
    குவலயத்தில் மூடியிலை ஆத லாலே
தேன்காணும் இசைபாடி என்றும் போலத்
    திகழ்ந்திடுவோம் வாருங்கள் அத்தான்’ என்றாள். 5