பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்87

படம்பிடிக்கும் கூட்டத்தார் தகிடு தத்தம்
    பண்ணுகிறார்; அறிவிருக்க அன்னார் மூளை
இடங்கொடுக்கும் நாளென்றோ? கலையும் வாழ்வும்
    இணைந்திருக்கும் படங்காணும் நாள்தான் என்றோ?
மடமையினைத் தொலையாரோ?” என்றேன்; “பேச்சு
    மடைதிறந்து விட்டீரோ? உறங்கும் நேரம்
கடமையினைச் செய்திடுவீர்!” என்றாள்; தூக்கம்
    கண்கவ்வ அவளென்னைக் கவ்விக் கொண்டாள். 4