பக்கம் எண் :

92கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

என்றுரைத்தேன்; “போங்களத்தான்!” என்று சொல்லி
    எழுந்தோடி ஓர்புறத்தே ஊடி நின்றாள்;
சென்றழைத்தேன் திரும்பாமல் “ஊஹும்” என்றாள்!
    “செவ்விதழாய்! ஏனிந்தக் கோபம்?” என்றேன்;
“நன்றுநன்று தாழ்வென்றீர் என்னின் பத்தை!
    நானெதற்காம்?” எனப்புலந்தாள்; முகத்தைத் தொட்டேன்
கன்றியகண் ணீர்சிந்தப் பதறி விட்டேன்
    கதறியழும் மகவொலியால் விழித்துக் கொண்டேன். 8