96 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
சம்பளம் வேண்டுமென்று சாற்றுகின்றான் என்பிள்ளை; கம்பளம் விற்றுக் கடன்கழித்தேன்; கையிருப்போ ஒன்றுமிலை; இத்தகைய ஊறு மிகவருத்தக் கன்றியுடல் உன்போல் கருத்தேன்; விழிசிந்தும் நீர்த்துளியோ நின்னைப் புறங்கண்டு விட்டதுபோல் ஆர்த்து மிகுகின்ற தையாவோ! என்னவரைக் காணின் அருள்கூர்ந்து காசனுப்பச் செப்பிடுவாய்; ஆணி இருந்தால்தான் அச்சுவண்டி மேலோடும்; மெய்யில் உயிர்நிற்க வேண்டுமெனில், பள்ளிசெலும் பையன் பயில்கின்ற பாடம் வளரவெனில் காசுபணம் வேண்டுமெனக் காதலர்பால் நெஞ்சுணர்ந்து பேசு; பிழையாகப் பேசி வருத்தாதே, காதல் முகந்தன்னைக் கண்டு பலநாள்கள் ஆதல் அவரறிவார்; ஆசைக் கணவரைத்தான் கண்டு மகிழ்வுபெறக் கண்துடிக்கும் செய்தியையும் விண்டு திரும்பு விரைந்து. 36 |