பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்99

வீரச்செல்வி

காதலுக்குத் தரணிதரும் பரிசை நெஞ்சில்
    கருதிமனம் வெதும்புகிற வேளை தன்னில்
சாதலுக்குத் துணிந்தொருத்தி முயல்வாள் தன்னைச்
    சந்தித்தேன்; உனக்கென்ன நேர்ந்த தம்மா!
ஓதுததற்கு மனமுண்டோ? உரைப்பாய் என்றேன்;
    “உரைப்பேன்”என் றவள்துயரை விரித்து நின்றாள்;
“ஏதமிலா வீரமெனப் பெயரும் கொண்டேன்
    எடுப்பார்கைப் பிள்ளைஎன வளர்ந்தேன் நானும்

மோதுகின்ற எப்பகைக்கும் அஞ்சா நெஞ்சன்
    முரணாத கொள்கைப்பற் றுள்ளான் தன்னைக்
காதலித்தேன்; கொள்கையிலாப் பச்சை யோந்திக்
    கருத்துடைய ஒருவற்கு மணமு டித்தார்;
பேதலித்தேன், காதலற்கோ இடும்பை என்னும்
    பெண்ணொருத்தி துணையானாள்; பாழும் பாரில்
சாதலைத்தான் மேற்கொண்டேன்” என்று ரைத்தாள்
    சலித்துப்போய்ச் சிந்தனையைக் கலைத்து விட்டேன் 8