10 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
தமிழைக் கோவிலுள் தடுத்திடும் பகையைத் தவிடெனப் பொடியெனச் செய்திடல் வேண்டும் தமிழன் என்றொரு இனமுண் டாயின் தயங்குவ தேனோ? எழுவீர்! எழுவீர்! -ஆண்டவன் நாமிடும் சோற்றினை ஒருநாள் உண்ட நாயும் நன்றியை மறவா தன்றோ? பூமியில் தோன்றிய நாள்முதல் உண்டோர் புன்மைகள் செய்திட முனைவதும் நன்றோ? -ஆண்டவன் |