5 தயக்கம் ஏன்? - எடுப்பு ஆண்டவன் வெறுத்தாரோ? - தமிழை அன்பர்கள் தாம் மறுத்தாரோ? -ஆண்டவன் தொடுப்பு வேண்டிய எண்ணங்கள் விளம்பிடத் தாய்மொழி விடுத்தொரு பிறமொழி விழைவது முறையோ? -ஆண்டவன் முடிப்பு நெஞ்சை உருக்கும் திருவா சகநூல் நினைக்க இனிக்கும் தேவா ரங்கள் அஞ்சலி செய்திட உதவா என்றால் அந்தநல் ஆத்திகம் வேண்டாம் இங்கே -ஆண்டவன் இந்தநன் னாட்டார் எடுத்தது கோவில் இருப்பதும் அருச்சகர் தமிழகக் காவில் வந்திடும் மொழிக்கோ வளர்ந்திடும் வாழ்வு வாழ்ந்தநம் மொழிக்கோ வந்தது தாழ்வு -ஆண்டவன் |