8 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
-மொழி 4 தமிழில் பாடு! - எடுப்பு பாடுவ தென்றால் தமிழினில் பாடு பாவையே உளமகிழ் வோடு! -பாடு தொடுப்பு வாடிடும் என்மன வேதனை தீர்ந்திட வாழ்வு மலர்ந்திட அன்பு நிறைந்திடப் -பாடு முடிப்பு வையம் பெற்றது தமிழ்மொழியாம் - அதன் வழி வழி வந்தன பிறமொழியாம் ஐயம் இல்லை உண்மையிதாம் - கண்ணே அருமைத் தமிழே நமதுயிராம் -பாடு இடுக்கண் வருங்கால் சிரித்திடுவாய் - மன இழுக்கெனும் மாசுகள் துடைத்திடுவாய் வடுக்கள் நீங்கிட வாழ்ந்திடலாம் - என வள்ளுவன் சொன்னதைப் பாடிடுவாய் -பாடு நன்மைகள் செய்ய முயன்றிடுவாய் - இன்றேல் நலிவுகள் செய்திட முனையாதே என்னும் மேலோர் அறவுரையை - நல்ல எழிலொடு காதலை வீரமதைப் -பாடு |